நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு காற்றின் மலைச்சரிவு மற்றும் மழைப்பொழிவு காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.