கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பெங்களூரூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையாவிற்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சித்தராமையா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ” மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” என அதில் கேட்டுக் கொண்டுள்ளார். அறிகுறி தென்பாட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.