தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

தமிழகத்தில் நாள்தோறும் ஒன்று, இரண்டு பேர் என இருந்த பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் மோடி எடுக்கும் முடிவை தமிழக அரசு அமல்படுத்துவது என்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக விளக்கமளித்த அவர், இன்று புதிதாக 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

இதனால், பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஈரோட்டில் ஒரு மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்று வண்ணங்களாக பிரித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் பயன்படுதப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்த இந்த வண்ணங்களுக்குள் மாவட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிபேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவடங்கள் சிவப்பு வண்ணத்தில் அதாவது அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

நீலகிரி, காஞ்சி, சிவகங்கைம் தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்டுள்ளதாக மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே