அட்லாண்டாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது ரியல் மாட்ரிட்!

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அட்லாண்டாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது ரியல் மாட்ரிட் அணி. 3 – 1 என்ற கோல் கணக்கில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த அணி. கரிம் பென்சிமா, ராமோஸ் (பெனால்டி) மற்றும் அசெசினோ தலா ஒரு கோல் அடித்து இந்த வெற்றிக்கு உதவினர். மோட்ரிச் மற்றும் வாஸ்குவேஸ் தங்கள் அணி வீரர்கள் கோல் போட உதவி செய்தனர். 

கடந்த மூன்று சீசன்களில் முதல் முறையாக கால் இறுதிக்குள் அந்த அணி நுழைந்துள்ளது. 2014 முதல் 18 வரையிலான 5 சீசனில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது அந்த அணி. 

ஒருபக்கம் எதிரணியினரை கோல் அடிக்க விடாமல் தடுத்து டிபன்ஸ் ஆடியபடி எங்கள் அணியின் வீரர்கள் அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆடியது அற்புதம். தொடக்கம் முதல் முடிவு வரை சிறப்பாக ஆடியிருந்தனர் எங்கள் வீரர்கள்” என்கிறார் அந்த அணியின் மேலாளர். முன்னதாக கடந்த பிப்ரவரியில் 1 – 0 என ரியல் மாட்ரிட் அணி பர்ஸ்ட் லெக் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே