200 பேருக்கு தினமும் உணவு வழங்கும் ரகுல் பிரீத் சிங்..

தினமும் 200 பேருக்கு உணவு வழங்கிறார் நடிகை ரகுல் பிரீத் சிங் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகள் , இதர வேளைகளும் பாதிப்பு அடைந்து உள்ளது.

இதனால் பொதுமக்கள் யாரும் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே அனைவரும் முடங்கி உள்ளனர். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. 

ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள். ஆனால், சிலர் வேறு விதமான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

நடிகை ரகுல் பிரீத் சிங் அவர் வசிக்கும் டில்லி குர்கான் நகரத்தில் தினமும் 200 பேருக்கு இரண்டு வேளை உணவு வழங்கி வருகிறாராம்.

இவரை போல் தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களும் , இந்த இக்கட்டான சூழ்நிலையில் செய்ய வேண்டும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே