ஊரடங்கை மதித்தால் குலுக்கல் முறையில் பரிசு – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திண்டுக்கல்லில் உள்ள 48 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு 2,500 ரூபாய் மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்பட உள்ளதாகவும், இதனை வீட்டில் இருந்து வாங்குவோருக்கு குலுக்கல் முறையில் ஃபிரிட்ஜ், பீரோ, பிரஷர் குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்க உள்ளாதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே