நிலவின் மேல் சந்திரயான் – 2 ரோவரை தானாக இறக்கும்: விஞ்ஞானி நம்பி நாராயணன்

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சாதனைப் பயணத்தை தொடரும் சந்திரயான்-2 விண்கலம் சவால்களை கடந்து நிலவில் தரையிறங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல் எட்டும் வகையில் இதுவரை எந்த விண்கலமும் சென்றிராத நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது. கடந்த 20ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான்-2 அடுத்த இரண்டாவது நாளில் அதாவது 22 ஆம் தேதி தான் எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை விண்ணுக்கு அனுப்பி இஸ்ரோவுக்கு பெருமை சேர்த்தது.

தனது சாதனை பயணத்தை தொடரும் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்குவதை இஸ்ரோ மட்டுமல்ல உலக விஞ்ஞானிகளே எதிர்பார்த்துள்ளனர். நிலவின் சமப்பரப்பில் சந்திரயான்-2 விண்கலம் தன்னுடைய ரோவரை தானாகவே இறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவிக்கிறார்.

சந்திரயான் – 2 விண்கலம் அடுத்த கட்டமாக நாளை தன்னுடைய பயண வேகத்தை நான்காவது முறையாக மாற்றிக்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திரயான் – 2 நிலவில் தரையிறங்கும் என கூறியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே