நல்லவர், வல்லவரான ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது: செல்லூர் ராஜூ

மத்திய அரசின் விருது பெற இருக்கும் நல்லவரும், வல்லவரும், நல்ல மனமும், குணமும் படைத்தவரான நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுக சார்பிலும், ரசிகன் என்ற முறையிலும் வாழ்த்துவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

மதுரை பனகல் சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, பகுதிவாரியாக உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டுறவு வங்கி முறைகேடுகளில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம் நடைபெறவுள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்களை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம்தான் உள்ளது என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது வழங்கி இருப்பது ரஜினி ரசிகரான தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே