மூன்று இந்திய பத்திரிகையாளர்கள புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1917-ம் ஆண்டு முதல் புலிட்சர் எனப்படும் உயரிய விருது வழங்கப்படுகிறது.
இதில் 2020 க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர்களான தர் யாசின், முக்தர்கான், சானி ஆனந்த் ஆகிய மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
![](https://i0.wp.com/www.tamilexpressnews.com/wp-content/uploads/2020/05/Yaseen-Dar-Mukhtar-Khan-and-Channi-Anand.jpg?resize=800%2C533&ssl=1)
இவர்கள் ஏ.பி. உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கையில் புகைப்பட கலைஞர்கள் எனவும்; கடந்த ஆண்டு காஷ்மீரில் ஊரடங்கின் போது ஏற்பட்ட வன்முறை காட்சிகளை வித்தியாச கோணத்தில் எடுத்த புகைப்படம் பாராட்டை பெற்றது.
இதையடுத்து அவர்கள் இந்த உயரிய விருதுக்கு தேர்வு பெற்றனர்.