ஐ.ஐ.டி நுழைவு வாயில் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி

சென்னை வேளச்சேரியை அடுத்த காந்திநகர் அருகே உள்ள ஐ.ஐ.டி நுழைவு வாயில் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்ளே இருப்பதால் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன்னதாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி காந்தி நகர் அருகே உள்ள ஐ.ஐ.டி நுழைவாயில் மூடப்பட்டது.

இந்த நுழைவு வாயில் வழியாக தான் அங்குள்ள கேந்திர வித்யாலயா, வனவானி மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அப்பகுதியில் உள்ள குழந்தைகள் சென்று வருகின்றனர்.

முன்னறிவிப்பின்றி மூடப்பட்டுள்ளதால், சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே