கோலம் வரைந்ததற்காக யாரும் கைது செய்யப்படவில்லை : அமைச்சர் பாண்டியராஜன்

கோலத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் அலங்கோலமாக இருந்திருந்தால் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் பொங்கல் பண்டிகையன்று பிரதமர் மோடியின் உரையைக் கேட்க பள்ளி வர வேண்டியது கட்டாயம் இல்லை என்றும்; முடியாதவர்கள் வீட்டில் இருந்தும் அதை கேட்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், பெசன்ட் நகரில் கோலம் வரைந்ததற்காக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும்; கோலத்தில் வெளிப்பட்ட கருத்துக்கள் அலங்கோலமாக இருந்திருந்தால் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மோடி எழுதிய EXAM WARRIORS புத்தகத்தை மு க ஸ்டாலின் படிக்க வேண்டும் எனவும் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மாணவர்களுக்கு ஸ்டாலின் எடுத்துரைக்கலாம் எனவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே