கடும் வறட்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணை நீர்மட்டம் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது, தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் கடும் வறட்சி நிலவுவதால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 9 அடியாக குறைந்துள்ளது இதனால் நெல்லை மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

