பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை

பள்ளி கேண்டீன்களிலும், பள்ளிகளை சுற்றி இருக்கும் கடைகளிலும் நொறுக்கு தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அறிவித்திருக்கிறது.

பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாதுகாப்பான உணவு வழங்குவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு துறை சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி பள்ளிகளில் உள்ள கேண்டீன்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நொறுக்கு தீனிகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத் தீனி மற்றும் அது தொடர்பான விளம்பரப் பதாகைகள், சுவர் விளம்பரங்கள் எதுவும் இடம் பெறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாணவர்களின் எம்மாதிரியான உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடுகிறார்கள்; அவை தரமானவையா?? என்பதை ஆய்வு செய்ய பள்ளி நிர்வாகம் தனி குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

தங்களது வளாகத்தில் உள்ள கேண்டீன்களில் என்னென்ன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பன போன்ற விவரங்களை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறைக்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே