அர்ஜூன் மார்க்- 1ஏ போர் பீரங்கியை இந்திய ராணுவத்திற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு சென்றார்.

சென்னை ஐ.என்.எஸ். கடற்படை தளத்திக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது .

ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பாஜகவினர் வரவேற்றனர்.

நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு காரில் வந்தடைந்தார் பிரதமர் மோடி. உள்நாட்டிலேயே தயாரான அர்ஜூன் மார்க் 1ஏ பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கியத் திட்டங்களை இன்று சென்னையில் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே