கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.500 கோடி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வங்கிக் கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோரிக்கை விடுத்துள்ளார்.