புதிய கல்விக் கொள்கை..; ஆன்லைன் வழியாக கருத்து கேட்பு!

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து, தமிழகத்தில் பெற்றோர், மாணவர்களிடம் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்பு நடைபெறுகிறது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு சார்பில் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்பது தொடர்பாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளரும், தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவருமான ஆபூர்வா, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

இதன் அடிப்படையில் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் இன்று ஆன்லைன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது.

இதற்காக 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுக்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை கருத்துகளை கேட்கிறது.

அந்தந்த பல்கலைக்கழகங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே