அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நேரடி ஒளிபரப்பை டி.வி., வாயிலாக பார்த்தார் மோடி தாயார் ஹீரா பென்.
அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று கோலாகலமாக நடந்தது.
விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, இன்று லக்னோ வந்தார்.
ஹெலிகாப்டர் மூலம், அயோத்தி சென்று பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.
விழா வீடியோ நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனை குஜராத்தில் காந்திநகரில் உள்ள பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது வீட்டிலிருந்த படி டி.வி. வாயிலாக பார்த்தார். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய போது இருகரம் கூப்பி பயபக்தியுடன் வணங்கினார்.