தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு பொங்கலை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வரும் 15ஆம் தேதி தைப்பொங்கல் திருநாள், 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 17ஆம் தேதி உழவர் திருநாள் கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொங்கல் போனஸ் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும்.

சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும்.

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே