பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் உட்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் காதலனை விரட்டிவிட்டு காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரும், அவரது நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மாணவியும், 17 வயது மாணவரும் ஓரிடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சசிகுமாரும், அவரது நண்பர் பாலமுருகனும் அங்கு சென்று இருக்கிறார்கள்.

மாணவரும், மாணவியும் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்த அவர்கள், அதைக் காட்டி மிரட்டி இருக்கிறார்கள்.

மாணவரை அங்கிருந்து விரட்டிய சசிகுமாரும், பாலமுருகனும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சசிகுமார் மற்றும் பாலமுருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

காவலரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே