யோகா போன்ற உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் வழிமுறைகளை பொது மக்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் வழக்கமாக தான் மேற்கொள்ளும் யோகா பயிற்சிகள் தொடர்பான காணொளிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்.
மனதின் குரல் வானொலி உரையின் போது வழக்கமாக உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எவ்வித உடற்பயிற்சிகள் செய்கிறீர்கள் என ஒருவர் கேட்டதாகவும்; அதனால் இந்த காணொளிகளை பகிர்ந்து உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அனைவரும் யோகா பயிற்சிகளை பழக்கமாக்கிக் கொள்வீர்கள் என நம்புவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பல காலமாக தான் யோகா செய்து வருவதாகவும் அதனால் சிறப்பான பலன் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள பிற வழி முறைகளை அறிந்து கொள்பவர்கள், அதனை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.