டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

நேற்று முன்தினம்(ஜூலை 3) பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று, வீரர்களுடன் சந்தித்து பேசினார்.

தொடர்ந்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆய்வு செய்தார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 5 ம் தேதி) பிரதமர் மோடி, ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.

அப்போது, சமீபத்திய சீன பிரச்சனை மற்றும் லடாக் சென்றது. மற்றும் சர்வதேச, தேசிய விவகாரங்கள் குறித்து, ஜனாதிபதியிடம் , மோடி விளக்கினார்.

“பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இன்று தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ராஷ்டிரபதி பவனில் விளக்கினார்” என்று இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே