பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதிச் சடங்குத் தொடக்கம்..!!

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு, திருவள்ளூா் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா்.

இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவா் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

அவரது புகழுக்குப் பெருமை சோக்கும் வகையில், காவல் துறை மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் 14 ஏக்கா் பண்ணை இல்லம் உள்ளது.

இங்குதான் எஸ்.பி.பி.யின் தந்தை, தாயாா், பாட்டி மற்றும் மாமியாா் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் இந்தப் பண்ணை இல்லம் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகும்.

இதன் காரணமாக மாதந்தோறும் அல்லது முக்கிய நாள்களில் எஸ்.பி.பி. இங்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாா் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இந்தப் பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே