பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடம்..!! மருத்துவக் குழு ஆலோசனை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மகன் சரண் வீடியோ வெளியிட்டார்.

இந்த செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இசை அவரை நிச்சயம் மீட்டுக் கொண்டு வரும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

கடந்த மாதம் 20ம் தேதி எஸ்.பி.பிக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டதையடுத்து அவரது உடல்நிலைநிலை முன்னேற்றம் அடைந்ததாக சரண் தெரிவித்தார். 

இந்த நிலையில், எஸ்பிபி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தற்போது எஸ்பிபியின் மகன், மகள், மனைவி உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

மேலும், எஸ்பிபிக்கு உயர்நிலை சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவக்குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே