பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5 ஆம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எஸ்பிபி உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவரது திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அதன் எதிரொலியாக எஸ்பிபி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பிபிக்கு எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக எஸ்பிபி மகன் சரண், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ஐபேடில் எஸ்பிபி பார்த்து வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே