பெரம்பலூர் : கிணற்றில் தவறி விழுந்த வாலிபரின் உடலை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் உயிரிழப்பு!!

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த நபரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரை மீட்க 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில், தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.

அதேவேளையில் மீட்க சென்ற தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே