பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த நபரை காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரரும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அருகே, செல்லிபாளையத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் ராதாகிருஷ்ணன் என்பவரை மீட்க 3 தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கிய நிலையில், தவறி விழுந்த ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார்.
அதேவேளையில் மீட்க சென்ற தீயணைப்பு வீரர்களில் ராஜ்குமார் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
மீட்கும் பணியில் இறங்கி மயக்கமடைந்த மேலும் 2 தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.