ஏர்டெல், வோடோபோன், ஐடியா செல்பேசி நிறுவனங்களின் பிரிமியம் திட்டங்களுக்கு மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான டிராய் தடை விதித்துள்ளது.
இது குறித்து டிராய் அந்நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ பிரிமியம் திட்டங்களால் அதில் சேராத மற்ற சந்தாதாரர்களுக்கான சேவை தரம் பாதிக்கப்படும்.
எனவே, இத்திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே பிரிமியம் திட்டத்தில் சேர்ந்தோரின் நலன்களை பாதுகாக்க வேண்டும்’ இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரத்தில் பிளாட்டினம் என்ற புதிய திட்டத்தையும், ஐடியா நிறுவனம் ரெட் எக்ஸ் என்ற திட்டத்தை நவம்பர் மாதம் முதல் செயல்படுத்தி வருகின்றன.
இத்திட்டங்களில் அதிவேக டேட்டா சேவை அளிக்கப்படும் எனவும் சில சேவைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.