மும்பையில் 6 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மும்பை துறைமுகம் பகுதியில் உள்ள 6 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி மாலை 4.43 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
அந்த கட்டடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனே இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.