தமிழ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆங்கில ஆண்டான 2019 முடிவடைந்து புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ம் தேதி வர இருக்கின்றது.
வரவிருக்கும் ஆங்கில புத்தாண்டை இனிதாக வரவேற்க, மக்களும் தயாராக இருக்கின்றார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற இருக்கின்றது.
பல இந்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது.
மெரினா கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் குவிய தொடங்கி இருக்கின்றார்கள்.
மெரினா கடற் கரையில் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கூட்டமாக கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், பலூன்கள் பறக்க விட்டும், புத்தாண்டை வரவேற்க மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
சென்னை நகரில் நட்சத்திர விடுதிகள் மற்றும் சென்னையில் இருக்கின்ற கிழக்கு கடற்கரை சாலையின் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்த ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டங்களில், அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருக்கின்றது.
புத்தாண்டை முன்னிட்டு, கேளிக்கை விடுதிகளுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து, சென்னை காவல் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணி வரையிலும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதித்து இருக்கின்றது.