கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க உத்தரவு

கிறித்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும் படி தமிழக பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‌தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புக்களும்,
பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

இந்த திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்கக் கோரி பதிவுத் துறைக்கு உத்தரவிடக்கோரி வேலூரை சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கிறித்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை மறுக்கிறது எனவும், இது தொடர்பாக தான் அனுப்பிய மனுக்களுக்கு எந்த பதிலும் இல்லை என்பதால் தனது மனுவை பரீசிலித்து சான்றிதழ் வழங்கவேண்டும் என கோரியுள்ளனர்.

‌இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கிறிஸ்தவர்களுக்கு நடத்தபட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனை பதிவு செய்வது இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து நீதிபதிகள் மனுவிற்கு டிசம்பர் 6 தேதிக்கு பதிலளிக்கும் படி, தமிழக பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே