ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னையில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் தியாகராய நகர் பாண்டிபஜார் சாலை.

இந்த சாலை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன வசதிகளோடு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி தி.நகரில் ரூ.39. 86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சாலையின் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த இலவச வை-ஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி. கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாண்டி பசார் சாலையின் இரு புறங்களிலும் எண்ணற்ற துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், உணவகங்கள் உள்ளது.

அங்கு வரும் மக்கள் கொண்டு வரும் பைக்குகள் மற்றும் கார்கள் இந்த சாலையில் பார்க்கிங் செய்யப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் பாண்டி பசார் சாலையில் பல அடுக்கு பார்க்கிங் கட்டிடம் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த பணிகள் முடிந்ததும் பாண்டி பசார் சாலையில் எந்த வாகனமும் நிற்க அனுமதிக்கப்படாது என கூறப்படுகிறது.

வரும் 15ம் தேதி முதல் பாண்டி பசார் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு, அண்ணா சாலை மார்க்கமாக மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதன்பின் பேசிய முதலமைச்சர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது.

போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மக்கள் எளிதாக பாண்டிபஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே