Breaking News: இயற்பியலுக்கான நோபல் பரிசு – மூன்று பேருக்கு அறிவிப்பு

2019ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2019ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

உடல் செல்கள் ஆக்சிஜன் அளவுக்கு ஏற்ப எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • கனடாவைச் சேர்ந்த ஜேம்ஸ் பீபிள்ஸ்,
  • சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த டிடியர் குவலாஸ், மற்றும்
  • மைக்கேல் மேயர் ஆகிய மூவருக்கு, இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில், ஜேம்ஸ் பீபிள்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், அண்டவியல் தொடர்பாக 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

பிரபஞ்சம் தொடர்பான கோட்பாடு குறித்து 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் ஆராய்ச்சி செய்ததாகவும், அது தான், பெருவெடிப்பு முதல், தற்காலம் வரையிலான பிரபஞ்ச வரலாற்றின் நவீன புரிதலின் அடித்தளமாக உள்ளதாகவும் போற்றப்படுகிறது.

பிரபஞ்ச உருவாக்கம் குறித்த ஆராய்ச்சிகளுக்காக அவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே