தற்போது திருச்சி லலிதா ஜுவல்லரியில் மூளையாக கொள்ளை வழக்கில் செயல்பட்ட முருகன் சரணடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அக்டோபர் 2-ல் திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை வழக்கில் இதுவரை மணிகண்டன், சுரேஷ் மற்றும் அவரது தாயார் கனகவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
13 கோடி ருபாய் நகைகள் கொள்ளையில் மூளையாக முருகன் செயல்பட்டதாக போலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில், முருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.