வங்கக் கடலில் வரும் 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு..!!

அரபிக்கடலில் உருவான டவ் தே புயலால் கடந்த சில நாட்களாக குஜராத், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து நேற்று முன்தினம் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் – மாகுவா இடையே கரையை கடந்தது.

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. அத்துடன் சுமார் 190 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் பல வீடுகள் குஜராத் மாநிலத்தில் சேதமடைந்தன.

இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 23 ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழகத்தில் மே இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால், தமிழகத்தை புயல் தாக்குவது குறைவு என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் 21ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே