நெல்லை ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன் கத்தியால் குத்திக் பெண் கொலை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காவல்நிலையம் முன்பு பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறில் விசாரணைக்காக மகளிர் காவல்நிலையம் வந்த சித்ரா(36) என்ற பெண்ணை அவரது கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அப்பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மனைவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய கணவர் முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் நடந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே