நெல்லை தாமிரபரணி ஆற்றில் 17 வயது சிறுவன் மூழ்கி பலி..!!

நெல்லை அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்த 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் அருண் ராஜ் (17). இவர் அதே பகுதியில் சமையல் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், அருண்ராஜ் நேற்று நண்பர்களுடன் அருகன்குளம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றார்.

ஆற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அருண்ராஜ், திடீரென நீரில் மூழ்கினார்.

இதனை கண்ட அந்த பகுதி மக்கள், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அருண்ராஜின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த தாழையூத்து போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே