இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்களை தேடும் பணி தீவிரம்..!!

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 433 பேரை செல்போன் மூலம் சுகாதாரத்துறையினர் தேடுகின்றனர்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, தமிழகத்திற்கு கடந்த நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 23-ந்தேதி வரை இங்கிலாந்தில் இருந்து வந்த 2,805 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் 1,593 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 487 பேரில் 54 பேர் மீண்டும் இங்கிலாந்து சென்று விட்டனர்.

மீதமுள்ள 433 பேரை கண்டுபிடிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே