முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை

இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதே போல் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மழையையும் பொருட்படுத்தாது பால் குடம் சுமந்து ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினர்.

சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த தேவரின் புகைப்படத்திற்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மலர் தூவினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல் மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பியுமான வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே