திமுக பொருளாளர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல் செய்தார்

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது .

இதனிடையே திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார்.

இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.

பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார்.

எனவே திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக தெரிவித்தது.

இந்நிலையில் திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே