சென்னை அருகே உதவி இயக்குனர் குத்திக் கொலை..!!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் உதவி இயக்குநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்ரா(25) உதவி இயக்குநராக உள்ளார். இவர் புத்தாண்டையொட்டி நள்ளிரவு ஐயப்பன்தாங்கலில் உள்ள உதவி இயக்குநர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று, நண்பர்கள் குருசஞ்சய், ராம்குமார் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

அப்போது ருத்ராவுக்கும் மணிகண்டனுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மணிகண்டன் ருத்ராவை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ருத்ரா மணிகண்டனை தாக்கியதில் அவர் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ருத்ராவை குத்தியுள்ளார். இதில் ருத்ரா படுகாயமடைந்த நிலையில் சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாங்காடு போலீசார் ருத்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து உதவி இயக்குநர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே