மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில், அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதில் முறைகேடு நடந்ததாக கூறி எம்.பி. கனிமொழி தலைமையில் திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஏன் மீண்டும் வாக்குகளை எண்ணி காண்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

மொத்தம் உள்ள 19 உறுப்பினர்களில் 10 பேர் அதிமுகவுக்கு ஆதரவாகவும், 9 பேர் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களித்திருருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் 10 உறுப்பினர்கள் தங்களுடன் இருக்கும்போது எப்படி அதிமுக வெற்றி பெற முடியும்? என கனிமொழி கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே