சென்னை: பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கும், அவரது மகனுக்கு தொலைபேசி வழியே சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரித்து அறிந்தார்.

ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதன் காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடக்கத்தில் நலமாக இருந்த அவரது உடல்நிலை சீரியசானதாக தகவல்கள் பரவின. உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மையில்லை, அப்பா நலமுடன் உள்ளார் என்று அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்தார். இந் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,எஸ்பிபி உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கும், மகன் எஸ்பிபி சரணுக்கும் போன் செய்து விசாரித்து கேட்டறிந்துள்ளார்.

இந்த விவரத்தை அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எஸ்பிபி உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன் என்று கூறி உள்ளார்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே