ஜெனீவா: உலக அளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக அதிகரித்து அதிர்ச்சியை தந்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்னமும் தமது ஓட்டத்தை நிறுத்தவில்லை. கிட்டத்தட்ட 215 நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் பாதிப்புகள் குறையவில்லை. பெரியண்ணன் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா என பல நாடுகளில் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போதைய நிலையில் உலகநாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7.62 லட்சத்தை கடந்துவிட்டது. ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.13 கோடியாக இருக்கிறது. 1.41 கோடி மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.