சென்னை: தமிழகத்தின் 2ஆவது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாள்தோறும் மக்கள் நெருக்கம் அதிகரித்து வருகிறது. வேலைக்காகவும், இன்ன பிற தொழில்களுக்காகவும் நாள்தோறும் பலர் சென்னை வருகின்றனர்.
அதன்காரணமாக போதிய இடவசதி இல்லாமல் இருக்கிறது. தவிர வாகன நெருக்கடியும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆகவே, பல ஆண்டுகளாக 2வது தலைநகராக வேறு ஒரு நகரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. அதில் முதல் சாய்ஸாக திருச்சி இருந்து வந்தது.
இப்போது தென்மாவட்டங்களை மையப்படுத்தி மதுரையை 2வது தலைநகராக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழ ஆரம்பித்துள்ளன. இந் நிலையில், தமிழகத்தின் 2வது தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம், நடைபெற்றது. அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
2ம் தலைநகரமாக மதுரையை அறிவிக்கக்கோரி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இது தென்மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.