தமிழகத்தில் மதுரையை 2-ஆவது தலைநகரமாக அறிவிக்க கோரி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் உத்தரவின்பேரில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.
அதில், மதுரையை தமிழகத்தின் 2-ம் தலைநகரமாக்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்து சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” இந்தியாவின் இரண்டாம் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
தற்போது சூழ்நிலையில் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்குவது என்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளது. மேலும், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன.
பல வெளிநாடுகளில் 2 நகரங்கள் உள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையை இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.