தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் மனைவி கண்ணாத்தாள் (67) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
1989 – ம் ஆண்டு முதன் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
அதன் பிறகு 3 முறை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 ம் ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் தமிழக வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் சொந்த ஊரில் வசித்து வந்த இவரது மனைவி கண்ணாத்தாள் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்படுவந்த நிலையில் இன்று தனது 67 வது வயதில் காலமானார்.
தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அமைச்சர் மனைவியின் இறுதி சடங்கு மிகவும் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
மேலும் அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தங்கள் இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.