பால் விலை உயர வாய்ப்பு..!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளின் பெட்ரோல் மீதான வரியே காரணம் என சொல்லப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மறைமுகமாக மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் இடியாக விழப்போவதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே