சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு விலை ரூ.328 குறைந்து, ரூ.34,976-க்கு விற்பனை செய்யப்பட்டது என செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது. 

பவுனுக்கு ரூ.328 குறைந்து, ரூ.34,976-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து, ரூ.4,372 ஆக இருந்தது.

அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து, ரூ.75 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து, ரூ.75,000 ஆகவும் இருந்தது என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே