18 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவக் காற்றின் சாதக போக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே