தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

அந்தவகையில் ராணிப்பேட்டை ,சேலம் ,தர்மபுரி ,புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, விருதுநகர் திருவண்ணாமலை, நீலகிரி, புதுச்சேரி, அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்றும்; வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே