சென்னை மாவட்டத்துக்கு வரும் 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்,

ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி திங்கள்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே